Posts

Showing posts from November, 2022

பாலுவின் "வீடு" திரைப்படம்...

  அம்மாவின் வீடு 1999 ஃபெப்ரவரியின் ஒரு நண்பகல் உச்சிப் பொழுதில், வெயில் சுட்டெரித்த ஒரு மதியத்தில், திருமங்கலம் ஆனந்தா தியேட்டர் அருகிலிருந்த சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடத்திற்கு வெளியே வேப்ப மரத்தடியில், நான் தாத்தாவின் தோளில் சாய்ந்து விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தேன். தாத்தா முதுகு தடவி “ஏடாகப்பா...ஏடாகப்பா” (”அழாதப்பா...அழாதப்பா”) என்று தேற்றிக் கொண்டிருந்தார். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. திருமங்கலத்தில், மம்சாபுரம் போகும் வழியில், குருவி போல் பத்து வருஷமாய் கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்து, அம்மா ஆசை ஆசையாய் வாங்கிய இரண்டு செண்ட் நிலத்தை விற்பதற்காக, உள்ளே சார்பதிவாளர் முன்னால் கையெழுத்துப் போடும்போது, அம்மாவின் முகம் மனதில் வந்து, வெடித்து வந்த அழுகையைக் கட்டுப்படுத்தி, வெளியில் ஓடி வந்து மரத்தடியில் நின்று கொண்டிருந்த தாத்தாவைக் கட்டிக் கொண்டு அழுதேன். ஒன்பதாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் படிக்கையில் நான் திருமங்கலம் பி.கே.என் ஸ்கூலில் ஹாஸ்டலில் இருந்தேன். தம்பிகள் ஓடைப்பட்டியிலிருந்து டே ஸ்காலராக பஸ்ஸில் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அம்மா கிராமத்தில் வளர்ந்த பெ...

லா.ச.ரா-வின் "பாற்கடல்" சிறுகதையை முன்வைத்து...

  அன்பெனும் ஒட்டுவாரொட்டி… அப்பா இறந்தபோது எனக்கு வயது பதினொன்று. பக்கத்து ஊர் சென்னம்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் மூன்று பையன்கள். நான்தான் மூத்தவன். எனக்கடுத்து இரண்டிரண்டு வருட வித்தியாசங்களில் இரண்டு தம்பிகள். அப்பா பள்ளிக்கூட ஆசிரியர். சகோதரியின் பெண்ணையே திருமணம் செய்து கொண்டவர். அம்மாவின் அம்மாவை நாங்கள் அத்தை என்று கூப்பிடலாம் என்றாலும், நாங்கள் பாட்டி என்றுதான் கூப்பிட்டோம். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பனிரெண்டு/பதினான்கு வருடங்கள் வயது வித்தியாசம். அம்மாவிற்கு திருமணம் ஆகும்போது, அம்மாவிற்கு வயது பதினைந்து. அம்மாவின் பதினாறாம் வயதில் நான் பிறந்தேன். கோவை வேளாண் கல்லூரியில் படிக்கும்போது, விடுதியில் தங்கியிருந்தேன். ஒருமுறை அம்மா பார்க்கவந்து, விடுதியின் விருந்தினர் தங்கும் அறையில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். உடன் படிக்கும் நண்பிகள் ரேணுகா, நிர்மலா, சுகுணா-வை அறைக்கு கூட்டிச்சென்று அம்மாவிற்கு அறிமுகப்படுத்தியபோது, “வெங்கடேஷ் அம்மாவா நீங்க?; அக்கா மாதிரி இருக்கீங்க!” என்று அவர்கள் வியந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது....